செய்தியாளர்களிடம் கோபப்பட்ட முன்னாள் முதல்வர்!
அவருடைய மகன் தேஜஸ்வி யாதவின் அரசியல் எதிர்காலம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி செய்தியாளர்களிடம் கோபமடைந்துள்ளார்.
பீகார் சட்டமன்றத்தில் இன்று குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமானது. எதிர்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்கள் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியிடம் தேஜஸ்வி யாதவ் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாதது குறித்தும், அவரின் அரசியல் எதிர்காலம் குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் கட்சியான ராஷ்ரிய ஜனதா தளம் அடைந்த தோல்வியிலிருந்து தேஜஸ்வி யாதவ் எவ்வாறு மீண்டு வருவார், அதுகுறித்த அவரின் திட்டமென்ன என்று பத்திரிகையாளர்கள் ராப்ரி தேவியிடம் கேள்வி எழுப்பினர். இதனாலும் ராப்ரி கோபமடைந்தார் எனக்கூறிப்படுகிறது
கோபமடைந்த ராப்ரி தேவி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் நலமுடன் வீட்டில் உள்ளார். அவர் கண்டிப்பாக சட்டமன்றத்திற்கு வருவார், அவருக்கு சிறந்த அரசியல் எதிர்காலம் உண்டு என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in