முதியோர் உதவித்தொகை உயர்வு!
புதுச்சேரியில் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
Aug 31, 2019, 15:50 IST
| புதுச்சேரியில் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, " 60 வயதை கடந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்து ரூ.1500 உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் 80 வயதை கடந்த முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து மூவாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார்.
மேலும், முதியோர் உதவித் தொகைக்காக 8,250 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ள 8250 பேருக்கும் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Newstm.in
newstm.in