பேருந்துக்குள் மினி தோட்டம் அமைத்துள்ள ஓட்டுநர்- குவியும் பாராட்டுகள்
பேருந்துக்குள் மினி தோட்டத்தை அமைத்து அதை பராமரித்து வரும் அரசு பேருந்து ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
வீட்டு தோட்டம், மாடி தோட்டம் என பலவகையான தோட்டங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் பேருந்து ஒன்றில் தோட்டம் அமைத்து ஓட்டுநர் ஒருவர் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், பெங்களூருவில் அரசு பேருந்து ஓட்டுநரான நாராயணப்பா, பெங்களூரில் இருக்கும் காவல் பைலசந்தரா - யஷ்வந்த்பூர் மார்க்கத்தில் பேருந்து ஓட்டி வருகிறார். இயற்கை மீது ஆர்வம் கொண்டவரான இவர் தான் ஓட்டிச் செல்லும் பேருந்தில் ஒரு மினி தோட்டத்தை அமைத்து அதை பராமரித்து வருகிறார்.
இதுகுறித்து பேசிய நாராயணப்பா சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக பேருந்தில் மினி தோட்டத்தை அமைத்து அதை பராமரித்து வருவதாகக் கூறியுள்ளார்.
newstm.in
newstm.in