உத்தரப்பிரதேசத்தில் டபுள் டெக்கர் ரயில் தடம் புரண்டது!
மொராதாபாத் ரயில் நிலையம் அருகே லக்னோ-ஆனந்த் விஹார் டபுள் டெக்கர் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
Oct 6, 2019, 22:55 IST
| மொராதாபாத் ரயில் நிலையம் அருகே லக்னோ-ஆனந்த் விஹார் டபுள் டெக்கர் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மொராதாபாத் ரயில் நிலையம் அருகே லக்னோ-ஆனந்த் விஹார் டபுள் டெக்கர் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இன்று காலை 10:15 மணிக்கு ஐந்தாவது மற்றும் எட்டாவது பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை என தெரிகிறது. ஆனால் ரயில் தடம் புரண்டதால் சில மணி நேரம் அந்த ரூட்டில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
newstm.in
newstm.in