வேட்பாளரின் வீட்டில் சிபிஐ சோதனை : ஆந்திர அரசியலில் பரபரப்பு
வங்கி கடன் மோசடி வழக்கு தொடர்பாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில், சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது.
May 1, 2019, 02:50 IST
| வங்கி கடன் மோசடி வழக்கு தொடர்பாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில், சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில், ஆந்திர மாநிலம், நரசபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக ரகுராம கிருஷ்ணம் ராஜூ போட்டியிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரூ. 2,655 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக, ஹைதராபாத்தில் உள்ள ராஜூவின் வீடு மற்றும் அலுவலங்கள் என மொத்தம் ஆறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். பல நேரம் நீடித்த இந்த சோதனையால் ஆந்திர அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in
newstm.in