Logo

லாரி மீது கார் மோதி விபத்து- 5 பேர் பலி

ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
 | 

லாரி மீது கார் மோதி விபத்து- 5 பேர் பலி

ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேணிகுண்டா மண்டல் என்ற இடத்தின் அருகே இன்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

இதில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP