பீஹாரில் பாஜக தலைவர் அனுஜ் குமார் வீடு குண்டு வைத்து தகர்ப்பு !
பீஹார் மாநிலத்தில் பாஜக தலைவராக இருப்பவர் அனுஜ் குமார். இவருடைய வீட்டிற்கு நேற்று 20 முதல் 30 நக்சலைட்டுகள் வந்தனர். பீஹாரில் பாஜக தலைவர் அனுஜ் குமார் வீட்டை நக்சலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தினர்.
Mar 28, 2019, 19:10 IST
| பீஹாரில் பாஜக தலைவர் அனுஜ் குமார் வீட்டை நக்சலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தினர்.
பீஹார் மாநிலத்தில் பாஜக தலைவராக இருப்பவர் அனுஜ் குமார். இவர் முன்னர் ஜனதா தள கட்சியில் இருந்தவர். இவருடைய வீட்டிற்கு நேற்று 20 முதல் 30 நக்சலைட்டுகள் வந்தனர்.
அப்போது அவருடைய வீட்டில் யாரும் இல்லை. இதையடுத்து அவரது வீட்டை நக்சலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். மேலும் தேர்தலை புறக்கணிக்குமாறு எழுதப்பட்ட போஸ்டர்களை அங்கு வீசி சென்றனர். இது குறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in
newstm.in