பெண் சிறார்களை பாலியல் கொடுமை செய்த 70 வயது கத்தோலிக்க பாதிரியார் தலைமறைவு: கேரள போலீசார் தேடுதல் வேட்டை
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில், 70 வயது கத்தோலிக்க பாதிரியார் பெண் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
Sep 20, 2019, 22:30 IST
| கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில், 70 வயது கத்தோலிக்க பாதிரியார் பெண் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தின், சென்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர், ஜார்ஜ் பதயாட்டி(70). கடந்த மாதம், ஆசிர்வாதம் வாங்க தேவாலயத்திற்கு வந்த, 9 வயது பெண் சிறார்கள் மூன்று பேரை, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறி, கேரள போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பொக்சோ சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Newstm.in
newstm.in