குண்டூர்- கார் விபத்தில் 7 பேர் பலி
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அதிக வேகத்தில் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 7 மாணவர்கள் உயிரிழந்தனர்.
அந்திர மாநிலம் எடுகுரு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் புத்தாண்டையொட்டி சுற்றுலா செல்லும் நோக்கில் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி எதிரே வந்த வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மாணவர்கள் பயணம் செய்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in