உத்தரப்பிரதேசம்- டிராக்டர் மீது லாரி மோதி 6 பேர் பலி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹார்தோய் பகுதியை சேர்ந்த 40 பேர் ஒரு டிராக்டர் டிரைலரில் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
சாதர்பூர் அருகே அவர்கள் வாகனம் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் டிரைலர் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் டிராக்டர் டிரைலரின் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in
newstm.in