ஒடிசா- கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி
ஒடிசா மாநிலத்தில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
May 22, 2019, 18:00 IST
| ஒடிசா மாநிலத்தில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஜரிங் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கொண்டிருந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 2 பேர் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
newstm.in
newstm.in