உத்தரப்பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதல்- 5 பேர் உடல் கருகி பலி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட்- பரேலி சாலையில் இன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நேபாளத்தில் இருந்து பிலிபிட் நோக்கி வந்து கொண்டிருந்த நேபாள சுற்றுலா பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கி, அதிலிருந்த பெட்ரோல் கசிந்து தீபற்றி எரியத் தொடங்கியது அதில் காரில் இருந்த 5 பேர் வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே தீயில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கோட்வாலி போலீசார் விரைந்து வந்து காரில் கருகிக் கிடந்த உடல்களை மீட்டு எடுத்தனர்.
காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
newstm.in
newstm.in