Logo

உத்தரப்பிரதேசம்- லாரி மீது கார் மோதி 4 மாணவர்கள் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மாணவர்கள் சென்ற கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 | 

உத்தரப்பிரதேசம்- லாரி மீது கார் மோதி 4 மாணவர்கள் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மாணவர்கள் சென்ற கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஹரியானா மாநிலத்திலிருந்து உத்தரப்பிரதேசம் நோக்கி இன்று காலை ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதில் 6 மாணவர்கள் பயணம் செய்தனர்.

அந்த கார் கிழக்கு விரைவு தேசிய நெடுஞ்சாலையில், சர்பாபாத் என்னும் கிராமத்தின் அருகே வந்த போது, சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பெண் உள்பட இருவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் அதிவேகமாக வந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விரைவு நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP