காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Dec 3, 2018, 15:19 IST
| காஷ்மீரில் பாதுகாப்புபடையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் உள்ள சங்க்ரான் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினரை கண்ட பயங்கரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரிடையே நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
newstm.in
newstm.in