ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும், ப.சிதம்பரம் உடல்நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் எய்ம்ஸ் குழு தாக்கல் செய்தது. அதில், சிதம்பரத்தின் உடல்நிலை நன்றாக உள்ளது. ஸ்டெரைல் அறை என்பது மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே தேவைப்படும். சிதம்பரத்தின் அறையை சுத்தமாக வைத்து கொசுவலை பயன்படுத்த வேண்டும் என அறிக்கையில் மருத்து குழு பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்திற்கு கொசு வலை கொடுக்கவும், வாரம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யவும், மாஸ் வழங்கவும் உத்தரவிட்ட நீதிமன்றம், புறநோயாளியாக சிகிச்சை அளிக்க வேண்டும்; சிறப்புச் சிகிச்சை தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
newstm.in
newstm.in