ஃபட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்க தடைக்கோரி புதிய மனு தாக்கல்!
நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வரை முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஃபட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்க தடைக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் சிவசேனா கூட்டணி கட்சியினர் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வரை முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஃபட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்க தடைக்கோரி சிவசேனான புதிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஃபட்னாவிஸ் நேற்றைய தினம் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Newstm.in
newstm.in