ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அக்டோபர் 30ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Oct 25, 2019, 00:00 IST
| ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அக்டோபர் 30ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், 7 நாள் காவல் முடிந்த நிலையில் ப.சிதம்பரத்தை டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று ஆஜர்படுத்தியது. அப்போது, சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என புகார் தெரிவித்த அமலாக்கத்துறை, அவரை மேலும் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க கோரியது.
இதையடுத்து, ப.சிதம்பரத்தை அக்டோபர் 30ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், சிதம்பரத்தின் காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
newstm.in
newstm.in