Logo

இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 | 

இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் இன்று 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பல வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில் அந்த நாட்டு பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நிலநடுக்கத்தில் ஒருவர் உயரிழந்ததாகவும் 10 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 12 நாடுகளில் 2,30,000 பேர் உயிரிழந்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP