லித்தியம்-இரும்பு பாஸ்பேட் பேட்டரிகள் உபயோகிக்கும் ஒடிசா கிராம மக்கள்
2019ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற, ஜான் பி குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்ஷஹாம் மற்றும் அகிரா யோஷினோ ஆகிய மூவரின் கண்டுபிடிப்பான லித்தியம்-இரும்பு (ஃபெரோ) பாஸ்பேட் பேட்டரிகளை, ஒடிசா மாநில மாலிகான் கிராம மக்கள் முதல் முறையாக உபயோகிக்கத் தொடங்கியுள்ளனர்.
லித்தியம் பேட்டரிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருப்பதற்காகவும், புதிய வகை லித்தியம்-இரும்பு பாஸ்பேட் பேட்டரிகளை கண்டுபிடித்திருப்பதற்காகவும், வேதியியல் விஞ்ஞானிகளான ஜான் பி குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்ஷஹாம் மற்றும் அகிரா யோஷினோ ஆகிய மூவருக்கும், 2019ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவர்கள் மூவரால் கண்டுபிடிக்கப்பட்ட, புதிய வகை லித்தியம்-இரும்பு பாஸ்பேட் பேட்டரிகளை, ஒடிசா மாநில மாலிகான் கிராம மக்கள் முதல் முறையாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இவர்கள் மேற்கொண்டிருக்கும் ஆராய்ச்சி, வயர்லெஸ் மற்றும் படிம எரிபொருள் பயன்பாட்டில் இல்லாத சமூகத்தை உருவாக்க பயன்படும் என்று நோபல் பரிசு கமிட்டி கருத்து தெரிவித்துள்ளது.
Newstm.in
newstm.in