காபூலில் தீவிரவாத தாக்குதல்: 10 பேர் பலி!
காபூலில் பாதுகாப்பு காம்பவுண்ட் மீது குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கும் திஸ்பிசாரி பகுதியில் பல அலுவலகங்கள் இருக்கின்றன. அங்கு நேற்று மாலை குண்டு வெடித்தது. இதில் பத்து பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆப்கானின் பொது சுகாதார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வஹிதுல்லா மஜ்ரோஹ் தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட விசாரணையில் ஜி4எஸ் முகாமில் இருந்த காரில் தான் குண்டு வெடித்ததாக தெரியவந்துள்ளது. ஜி4எஸ் என்பது பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமாகும். அந்த பகுதியில் வெளிநாட்டவர் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in
newstm.in