பயங்கரவாத தாக்குதல்: 10 பேர் பலி, 27 பேர் காயம்!
ஆப்கானிஸ்தானில், ஆட்டோவில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என மொத்தம், 10 பேர் பலியாகினர், 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
Oct 8, 2019, 01:52 IST
| ஆப்கானிஸ்தானில், ஆட்டோவில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என மொத்தம், 10 பேர் பலியாகினர், 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின், ஜலாலாபாத் நகரில், ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று மாலை, ராணுவ வாகனம் நிறுத்தப்பட்டிருந்த பகுதி அருகே, நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது.
பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், ராணுவ வீரர்கள், பொது மக்கள் என 10 பேர் பலியாகினர்; 27 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Newstm.in
newstm.in