இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
2019 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு சுவிட்சர்லாந்து மற்றும் கனடாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானிகள் 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனை போல மற்றொரு நட்சத்திரம் மற்றும் அதைச்சுற்றி வரும் கோளை கண்டுபிடித்ததற்காக ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் கியூலோஸ் ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேலும், அண்டவியல் தொடர்பான இயற்பியல் பங்களிப்பிற்காகவும் மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. செல்கள் ஆக்சிஜனை எப்படி நுகரும் என்ற ஆய்வுக்காக வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர், கிரேக் எல்.செமன்ஸா ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.im
newstm.in