நைஜீரியா: போலீசாரை சுட்டுக்கொன்று எண்ணெய் நிறுவன ஊழியர்கள் கடத்தல்
நைஜீரியாவில் 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்றுவிட்டு, இரண்டு எண்ணெய் நிறுவன ஊழியர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் ரிவர்ஸ்சில் இயங்கிவரும் ஷெல் எண்ணெய் 2 ஊழியர்கள், எண்ணெய் வியாபாரம் பாயேல்சா மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். ஊழியர்களுக்கு பாதுகாப்பாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென வழிமறித்தனர். இதனை பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால், 2 போலீஸ் அதிகாரிகளையும் சுட்டுக்கொன்று விட்டு எண்ணெய் நிறுவன ஊழியர்கள் இரண்டு பேரையும் கடத்திச்சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட ஊழியர்களின் தற்போதைய நிலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை ஷெல் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
newstm.in