Logo

உலக ஒற்றுமைக்காக ஒன்றாக உழைப்போம்: மோடி, புடின், ஜி ஜின்பிங் சந்திப்பில் உறுதி

அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபருடனான சந்திப்பில் உலக அமைதிக்காக மூன்று நாடுகளும் இணைந்து செயல்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
 | 

உலக  ஒற்றுமைக்காக ஒன்றாக உழைப்போம்: மோடி, புடின்,  ஜி ஜின்பிங் சந்திப்பில் உறுதி

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபருடனான சந்திப்பில் உலக அமைதிக்காக மூன்று நாடுகளும் இணைந்து செயல்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. 

ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.
 
இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் இன்று தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா சென்றார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்நிலையில் அவர் சீன பிரதமர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய பிரதமர் புதினை சந்தித்தார். அப்போது உலக அமைதிக்காக மூன்று நாடுகளும் இணைந்து செயல்படும் என்று மூன்று நாட்டு தலைவர்களும் உறுதியளித்தனர். முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பானின் பிரதமர் அபே ஆகியோரையும் மோடி சந்தித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP