இஸ்ரேல் : கால்பந்து போட்டியில் ஏவுகணைகள் வீசுவோம் - இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு எச்சரிக்கை!!
இஸ்ரேல் நாட்டில் நடைபெறவிருக்கும் கால்பந்து போட்டியில் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்வோம் என்று பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு இஸ்ரேல் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Nov 17, 2019, 01:00 IST
| இஸ்ரேல் நாட்டில் நடைபெறவிருக்கும் கால்பந்து போட்டியில் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்வோம் என்று பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு இஸ்ரேல் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவரான பஹாத் அபு அல் அடாவின் மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டில் சில நாட்களாக ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர் பயங்கரவாதிகள். இதை தொடர்ந்து, இஸ்ரேலில் விரைவில் நடைபெறவிருக்கும் போலந்து மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான கால்பந்து போட்டியில் ஏவுகணைகள் வீசுவோம் என்று இஸ்ரேல் அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு.
Newstm.in
newstm.in