இந்திய ராணுவ அதிகாரி மாயம்!
காங்கோவில் ஐ.நாவின் அமைதி குழுவில் இடம்பெற்ற இந்திய ராணுவ அதிகாரியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Sep 12, 2019, 14:52 IST
| காங்கோவில் மாயமான இந்திய ராணுவ அதிகாரியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் இந்திய ராணுவ அதிகாரி கௌரவ் சோலங்கி காணாமல் போனதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இவர் கடந்த சனிக்கிழமை கிவு ஏரியில் பயணம் செய்ததாகவும், அதன் பின்னே அவர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கோவில் மாயமான கௌரவ் சோலங்கியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவர் ஐ.நாவின் அமைதி குழுவில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Newstm.in
newstm.in