Logo

இலங்கை நாடாளுமன்றக்குழு கூட்டம் தொடங்கியது

இலங்கையில் இன்று மாலை 4 மணிக்கு நாடாளுமன்ற பொதுக்குழு கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்னர் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று மாலை 5 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை சந்திக்க இருக்கிறார்.
 | 

இலங்கை நாடாளுமன்றக்குழு கூட்டம் தொடங்கியது

இலங்கையில் இன்று மாலை 4 மணியளவில் நாடாளுமன்ற பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மாலை 5 மணிக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை சந்திக்க இருக்கிறார். 

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு அவரை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. தொடர்ந்து, ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை பிரதமராக பதவியேற்க அழைத்து, அவரும் இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். 

இந்த விவகாரம் தான் தற்போது உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. இலங்கையில் ரணில் பதவியினை பறித்துவிட்டு ராஜபக்சே பதவியேற்றதற்கு எதிராக அங்கு போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அரசியல் சட்டத்தை மீறி அதிபர் நடந்துகொள்கிறார் என சிறிசேனா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், இலங்கை தனது அரசியல் சாசன நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச நீதி ஆணையம் (ICJ) வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள ராஜபக்சே, இன்று நாடாளுமன்றக்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு  நாடாளுமன்ற பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், இந்த கூட்டத்திற்கு பின்னர் மாலை 5 மணிக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை சந்திக்க இருக்கிறார். இதனால் இலங்கை அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP