Logo

நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, நாளை நாடாளுமன்றத்தை கூறியுள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய.
 | 

நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, நாளை நாடாளுமன்றத்தை கூறியுள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவிநீக்கம் செய்து, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமித்தார் அதிபர் மைத்திரிபால சிறிசேனா. நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லாத நிலை எழுந்ததால், நாடாளுமன்ற வாக்கெடுப்பை ரத்து செய்து, நாடாளுமன்றத்தை கலைத்தும் உத்தரவிட்டார். மேலும் புதிய நாடாளுமன்ற தேர்தல் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளதாகவும் சிறிசேனா அறிவித்தார். இது சிறிசேனாவின் சர்வாதிகார போக்கை காட்டுவதாக இலங்கை எதிர்க்கட்சிகள் கண்டித்தனர்.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை எதிர்க்கட்சிகள் நாடின. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதிபர் சிறிசேனாவின் உத்தரவுகள் மீது டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. இலங்கை நாடாளுமன்றம் உடனே கூட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழிவகுத்தது. இந்நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் ஜெயசூரிய, நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தை அழைத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP