Logo

பிரதமருக்கு குடைபிடித்த இலங்கை அதிபர்!

இலங்கைக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்காக, அந்த நாட்டு அதிபர் சிறீசேனா குடைபிடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 | 

பிரதமருக்கு குடைபிடித்த இலங்கை அதிபர்!

இலங்கைக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்காக, அந்த நாட்டு அதிபர் சிறீசேனா குடைபிடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ஒருநாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கைக்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், தமது பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கை அதிபர் மாளிகைக்கு சென்றார்.

பிரதமர் சென்றபோது அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால், இலங்கை அதிபர் சிறீசேனா, தானே குடைபிடித்து மோடியை வரவேற்றார். அத்துடன் அவரே தொடர்ந்து குடைபிடித்து கொண்டிருந்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தமது வருகையின் அடையாளமாக, இலங்கை அதிபர் மாளிகை வளாகத்தில், பிரதமர் நரேந்திர மோடி அசோக மரக்கன்றை நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP