இலங்கை:தாக்குதல் கோழைத்தனமானது: ரா.சம்பந்தன்
இலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா.சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Apr 22, 2019, 02:30 IST
| இலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா.சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல் கோழைத்தனமானது என்றும், குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் எனவும் ரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இன்று காலை தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 39 அயல்நாட்டவர் உட்பட 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in
newstm.in