இலங்கை: சபாநாயகர் அறிவித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு வாக்கெடுப்பில் வெற்றி!
நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு 121 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பெரும்பான்மை அடிப்படையில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது, இதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் கூடிய நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்தார். மேலும், அடுத்த சில நாட்கள் நாட்கள் நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே கட்சி எம்.பிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றம் கூடியது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினரும், ராஜபக்சே தரப்பினரும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரணில்ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். ஆதாவது ராஜபக்சே ஆதரவாளர் தினேஷ் குணவர்த்தன பேச்சுக்கு ரணில் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதால் ராஜபக்சே ஆதரவாளர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே சபாநாயகர், நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கான பெயர்களை பரிந்துரைத்தார். இதில் சபாநாயகர் தெரிவித்த தெரிவுக்குழுவுக்கு 121 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் ரணில் தரப்பில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு வெற்றி பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே ராஜபக்சே ஆதரவாளர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து, பாராளுமன்றம் எதிர்வரும் 27 மற்றும் 29ம் தேதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
newstm.in
newstm.in