Logo

இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக உயர்வு

இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக உயர்ந்துள்ளது.
 | 

இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக உயர்வு

இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.

அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 215 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 

மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மேலும் 75 பேர் உயிர் இழந்தனர்.

இதனால் பலி எண்ணிக்கை நேற்று 290 ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் சிலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிாிழந்தோா் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP