இலங்கையில் முகத்தை மூடுவதற்கு தடை : அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு
இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து, அடையாளத்தை மறைக்கும் வகையில் துணியால் முகத்தை மூடிக்கொள்ள தடை விதித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
Apr 29, 2019, 15:45 IST
| இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து, அடையாளத்தை மறைக்கும் வகையில் துணியால் முகத்தை மூடிக்கொள்ள தடை விதித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில், 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்துப்பட்டுள்ளது. மேலும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அடையாளத்தை மறைக்கும் வகையில் துணியால் முகத்தை மூடிக்கொள்ள அதிபர் சிறிசேனா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்று முதல் இலங்கையில் முகத்தை மூடும் அனைத்து விஷயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in