இலங்கையில் கடவுள் பாதம்? மஸ்கெலியாவில் பரபரப்பு
கடவுள் பாதமா? மஸ்கெலியாவில் பரபரப்பு
Jan 21, 2018, 16:13 IST
| இலங்கையில் மஸ்கெலியா, வட்மோர் தோட்டப் பகுதியில் ‘கடவுளின்' வலது கால் பாத சுவடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பரவிய செய்தியையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மனிதர்களுடைய பாதச் சுவட்டை விடப் பெரிதாகக் காணப்படும் இந்தப் பாதச் சுவடு, முதலில் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த அப்பகுதிவாசிகள், உடனடியாக அது குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதற்கிடையில் அங்கு கூடிய மக்கள், அது கடவுளின் பாதச் சுவடாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணியதுடன், அதற்கு மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து பூஜையை ஆரம்பித்துவிட்டனர். இந்த பாதம் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in