அதிபர் வேட்பாளராக கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிபர் வேட்பாளராக கோத்தபய ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்புவில் இன்று இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் அதிபர் வேட்பாளாராக கோத்தபய ராஜபக்சேவை அறிவித்துள்ளார் மகிந்த ராஜபக்சே. கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும் கூட. மேலும், அந்த மாநாட்டில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தலைவராக மகிந்த ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் வரவுள்ள அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிபர் வேட்பாளாராக மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் அறிவிக்கப்பட்டது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in
newstm.in