இலங்கையில் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து
தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடந்த குண்டு வெடிப்புகளை தொடா்ந்து இலங்கையில் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Apr 21, 2019, 22:25 IST
| தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடந்த குண்டுவெடிப்புகளை தொடா்ந்து இலங்கையில் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதை தொடர்ந்து, அந்நாட்டில் அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு கிளம்பும் பயணிகள், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 4 மணி நேரத்துக்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அனைத்து விமானங்களிலும் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
newstm.in
newstm.in