வடகொரியாவில் வரலாறு காணாத வறட்சி
வடகொரியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதாக அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவில் இந்த ஆண்டு, பருவமழை சராசரியைவிட குறைவாக பெய்துள்ளது.
May 17, 2019, 17:29 IST
| வடகொரியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதாக அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் இந்த ஆண்டு, பருவமழை சராசரியைவிட குறைவாக பெய்துள்ளது. இந்த மழை அளவு, கடந்த 1979 -இல் பெய்த மழை அளவைவிட குறைவாகும். அதாவது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு பருவமழை குறைவாக பெய்துள்ளது. எனவே, வடகொரியா கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட ஐ.நா. குழு, உணவுப் பொருள்களின் விளைச்சல் குறைந்துள்ளதால், வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in