கோலாகல நவராத்திரி ஆரம்பம் – நவராத்திரி வழிபாட்டு முறை - எட்டாம் நாள்
அம்பாள் : ஸ்ரீநரஸிம்ஹி
உருவ அமைப்பு : மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கரம் கொண்டவள். சிம்ம வாகனம்
குணம் : குரூரம் (சத்ருக்களை )
சிறப்பு : ஸ்ரீநரஸிம்மரின் அம்சம்
நைவேத்யம் : சர்க்கரைப் பொங்கல், பானகம், விடாப்பருப்பு
பூஜை செய்ய உகந்த நேரம் : காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30
மலர் : துளஸி, மரிக்கொழுந்து, பச்சிலை
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் : 8
பாட வேண்டிய ராகம் : காம்போதி
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் : கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
திசை புத்தி நடப்பவர்கள்: சனி திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள் : லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சனி அல்லது கேது இருப்பவர்கள்
விசேஷம் : சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுவிப்பவள்
எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 8 உடையவர்கள்
சொல்ல வேண்டிய பாடல்:
[1] ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.
[2] மூல மந்திரம்: ஓம் - ஸ்ரீம் - நரஸிம்யை - நம :
[3] காயத்ரி: ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!
newstm.in