Logo

சாய்பாபாவின் ஊஞ்சல் படுக்கை!

ஷீரடியில் இருந்த கோயிலில் சனி, கணபதி, சங்கரர், சரஸ்வதி, மாருதி, கிராம தேவதைகள் அனைத்தும் இருந்தன. இவற்றையெல்லாம் தாத்யா பாட்டீல் என்னும் பக்தர் மூலமாகச் சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தினார் சாய்பாபா.
 | 

சாய்பாபாவின் ஊஞ்சல் படுக்கை!

ஷீரடியில் இருந்த கோயிலில் சனி, கணபதி, சங்கரர், சரஸ்வதி, மாருதி, கிராம தேவதைகள் அனைத்தும் இருந்தன. இவற்றையெல்லாம் தாத்யா பாட்டீல் என்னும் பக்தர் மூலமாகச் சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தினார் சாய்பாபா.
இரவுப் பொழுதில் தன்னுடன் படுத்து உறங்குவதற்கு மகல் சபதி மற்றும் தாத்யா பாட்டீல் ஆகிய இருவரை மட்டுமே பாபா அனுமதிப்பார். அவர்கள் தலைகளை தெற்குப் புறமாக வைத்துப் படுக்கக்கூடாது என்பார்.

ஹோமத்தைத் தனக்குத் தானே சுற்றி பிரதட்சணம் செய்வார் சாய்பாபா. அப்போது அவர் மந்திரங்களை உச்சாஜீப்பார். அவை அரேபி மற்றும் பொ;சிய மொழியில் மட்டுமே இருந்தது. சமஸ்கிருத மந்திரத்தை சாய்பாபா உச்சாஜீத்ததே இல்லை என்றும் கூறுவர். சில சமயங்களில் சங்கு ஊதுவார். அப்போது ‘ஒம்” என்னும் ஒலி மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும், அழுத்தமாகவும் வெளிக்கிளம்பும். பிரார்த்தனையின் போது, காதுகளிலும், மூக்கிலும் மலர்களைச் செருகிக் காட்சியளிப்பார். தன் தலையிலும் மலரை அணிந்துகொள்வார்.

அவர் அமர்ந்துகொள்வதற்கென வெள்ளியிலான சிம்மாசனம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதைப் பயன்படுத்துவதில் அவர் ஆர்வம் காட்டியதே இல்லை. தனது பிரத்யேகமான சாக்குத் துணியிலேயே சாய்பாபா அமர்வார். மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் சாய்ந்து நின்று கொண்டு, அங்கு செல்வோலீஜீடம் பேசுவார். அவரது பேச்சுக்கள் அனைத்துமே எளிதில் புரிந்து கொள்ள முடியாது, ஆனால் ஏராளமான அர்த்தங்கள் உள்பொதிந்ததாக இருக்கும்.
சாய்பாபா இரவில் படுத்து உறங்குவது ஒரு சாக்குத் துண்டை விரித்துதான். சாய்ந்து கொள்ள முதுகிற்கு ஒரு திண்டு மட்டும் உண்டு. பக்தர்கள் ஆசையுடன் அவர் படுத்து உறங்க மெத்தை வாங்கிக் கொடுத்தனர்.
ஆனால் அதனைப் புறக்கணித்துவிட்டார்.

சாய்பாபாவின் ஊஞ்சல் படுக்கை!

நானா சாகேப் டாங்ளே என்ற பக்தர் சாய்பாபா படுத்துக்கொள்ள நான்குமுழ நீளமும், ஒரு முழ அகலமும் கொண்ட ஒரு மரப்பலகையை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதனைத் தரையில் அமர்த்தி அதன்மீது படுத்து உறங்குவார் என்று பார்த்தால், சாய்பாபா அவ்வாறு செய்யாமல் ஏமாற்றினார். மசூதியின் உத்தரத்தில் இற்றுப்போன கந்தல் துணியைக் கயிறாக்கி, அதனை ஊஞ்சல் போல் அமைத்துக்கொண்டார். ஊஞ்சலைத் தாங்க வேண்டுமென்றால் இரும்புக் கம்பிகளைத்தான் பயன்படுத்துவார்கள். அதுதான் பலமானதாகவும்,
மனித உடலைத் தாங்கும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். ஆனால் சாய்பாபாவோ துணியைக் கயிறாக்கி, அதிக பலமற்ற உத்திரத்தில் தொங்கவிட்டு....

இது பக்தர்கள் அனைவரின் அடிவயிற்றையும் கலக்கியது. சாய்பாபாவின் எடையை அந்த ஊஞ்சல் எப்படித் தாங்கப் போகிறது? மேலும், அந்த ஊஞ்சலின் நான்கு மூலைகளிலும் அகல் விளக்கு ஏற்றி
வைப்பார். அது இரவு முழுவதும் எலீஜீந்து கொண்டே இருக்கும். அந்தக் காட்சி கண் கொள்ளாததாக இருக்கும். எனினும், சாய்பாபா அந்த ஊஞ்சலில்தான் படுத்து உறங்குவார். அவர்
எப்படி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த ஊஞ்சலில் ஏறுகிறார், இறங்குகிறார் என்பது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை வரவழைக்கும்.

ஆனாலும் அதை எவராலும் பார்க்கவே முடியாது. ஆனால், சாய்பாபா அதில்  படுத்து உறங்குவார். கீழே விழாமல் அந்த ஊஞ்சலில் அவர் உறங்குவது அந்தக் கிராம மக்களை ஆச்சாஜீயத்தில் ஆழ்த்தியது.
அவரது எடையை எப்படி அந்தக் கயிறு தாங்குகிறது என்பதும் அந்த மக்களிடையே எழுந்த மிகப்பெரும் கேள்விக்குறி. இந்த அதிசயத்தைப்ப பார்க்க அனைவரும் ஆர்வம் கொண்டனர். இதற்காக சாய்பாபா படுத்து
உறங்குவதைப் பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டனர். இது அவரை எரிச்சலடையச் செய்தது. சில நாட்கள் பொறுத்துப்பார்த்தார். ஆனால் பக்தர்கள் கூட்டம் குறைவதாக இல்லை. பொறுமை இழந்த சாய்பாபா, கோபத்தில் ஒருநாள் அந்தப் பலகையைத் துண்டு துண்டாக உடைத்தெறிந்து
விட்டார்.

சாய்பாபாவின் ஊஞ்சல் படுக்கை!

சாய்பாபாவிற்குக் கோபம் வருவதும் உண்டு. சில நேரங்களில் பூஜைத் தட்டைத் தூக்கி எறிந்துவிடுவார். பக்தர்களிடம் கோபத்தில் கத்தவும் செய்வார்.கோபம் வருகிறபோது அவரது உடல் பலமாகக் குலுங்கும். கண்கள் நெருப்புபறக்கிற மாதிலீஜீ செக்கச்ஸீவேல் என்று மாறிவிடும். விழிகள் நாலாபுறமும்கோபத்தில் சுழலும்.  இருப்பினும் சாய்பாபா மிகவும் மென்மையான மனம் படைத்தவர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே கிடையாது. அவர் அடிக்கடி பக்தர்களிடம் கூறுவார், ‘தான் ஒருபோதும் கோபமாக இருந்ததே கிடையாது. தாய், தான் பெற்றெடுத்த குழந்தைகளை என்றாவது உதைப்பாளா? குடல் என்றாவது நதிகளைப் புறக்கணிக்குமா? தாமும் தன்னை நம்பி வந்த அடியவர்களின் நலனை எப்போதுமே அலட்சியப்படுத்துவது
இல்லை”.

பக்தர்களின் எண்ணங்களுக்கு சாய்பாபா மிகுந்த மதிப்பளித்தார் என்பது உண்மை. அவர்கள் தம்மை வழிபட அனுமதித்தார். சில பக்தர்கள் அவருக்குச் சாமரம் வீசினார்கள். இன்னும் சிலர் இசைக்கருவிகளை வாசித்தனர். அவாஜீன்  கை, கால்களை கழுவி மகிழ்ந்த பக்தர்களும் உண்டு. வெற்றிலை, பாக்கு வைத்து நைவேத்தியம் செய்து வழிபட்டவர்களும் உண்டு. இவற்றையெல்லாம் சாய்பாபா என்றுமே தடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்பாபாவின் ஊஞ்சல் படுக்கை!


வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர் 
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP