ஒவ்வொரு திதியில் செய்யும் தர்பணத்திற்கான பலன்கள்!
முன்னோர் வழிபாட்டிற்க்கான சிறந்த பருவமாக கருதப்படும் மஹாளய பட்சத்தில் வரும், 15 நாட்களிலும், நம் முன்னோர்களை எண்ணி தர்ப்பணம் கொடுக்கலாம். மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம். அதாவது, முன்னோர்களின் பெயர் சொல்லி அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை அர்க்யம் கொடுப்பது, அதாவது கை வழியாக பூமியிலோ, நீர் நிலையிலோ எள் கலந்த நீரை சேர்ப்பது.
அப்படி ஒவ்வொவரு திதி அன்றும் செய்யப்படும் தர்பணத்திற்க்கான பலன்கள். அதாவது இன்று முதல் நாள் பிரதமை. தொடர்ந்து வரும் அடுத்தடுத்த நாட்கள்... துவிதியை, திரிதியை...
பிரதமை - பணம் சேரும்
துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
பஞ்சமி - செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
சஷ்டி - புகழ் கிடைத்தல்
சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
எனவே, மஹாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால், லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். மஹாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால், நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.
newstm.in
newstm.in