மணிரத்னம் மீது பாய்ந்த தேசதுரோக வழக்கு ?
நீதிமன்றம் மணிரத்னம் உட்பட இந்த கடிதத்தை எழுதியவர்கள் அனைவர் மீதும் தேசதுரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாம்.
கடந்த கடந்த ஜூலை மாதம் 'பசு வதை தடுப்பு' என்னும் போர்வையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களான மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவியது. இந்த தகவலை மணிரத்னம் மறுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த கடிதத்தை எதிர்த்து பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநலவழக்கு பதிந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மணிரத்னம் உட்பட இந்த கடிதத்தை எழுதியவர்கள் அனைவர் மீதும் தேசதுரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாம்.
newstm.in
newstm.in