Logo

படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை

பயத்தில் இருந்த நடிகை அனுபமா பிரகாஷ், மாலை நேரத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது அறை வரை சென்று வருவதாக சொல்லிவிட்டு டெல்லிக்கு விட்டார். மேலும் விரிவான செய்திகளுக்கு newstm.in
 | 

படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை

கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'அவளுக்கென்ன அழகிய முகம்'. இந்தப் படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதியிருக்கிற ஒரு பாடலுக்கான காட்சிகளை கொடைக்கானல் மலை உச்சியில் படமாக்கிக் கொண்டு இருந்தார் இயக்குநர் கேசவன். 

படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை

கொடைக்கானல் மலைமீது, மிக உயரமான இடத்தில் வைத்து பாடலை நடன இயக்குனர் ஷங்கர் படம்பிடித்துக் கொண்டு இருந்த வேளையில் உயரமான இடத்தில் நிற்க வைத்ததால், பயத்தில் இருந்த நடிகை அனுபமா பிரகாஷ், மாலை நேரத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது அறை வரை சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர் யாரிடமும் சொல்லாமல், படப்பிடிப்பு தளத்திலிருந்து மதுரை வந்து, அங்கிருந்து விமானம் மூலம் தனது சொந்த ஊர் டெல்லிக்கு விட்டார். 

படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை

படப்பிடிப்பு தளத்தில், இந்த தகவல் தெரியாமல் படப்பிடிப்பு குழுவினர்கள், கொடைக்கானல் மலை முழுவதும் ஹீரோயினைத் தேடிக் களைத்தனர். பின்பு தான், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஹீரோயின், சொந்த ஊரான டெல்லிக்கு ஓடியது தெரிந்தது. பின்னர் படத்தின் தயாரிப்பாளர் டெல்லிக்குச் சென்று சமாதானம் செய்து மீண்டும் ஹீரோயினைப் படபிடிப்பிற்கு அழைத்து வந்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP