Logo

14 வருடங்கள் கழித்து மீண்டும் சுரேஷ்கோபியுடன் ஜோடி சேர்ந்துள்ள தளபதியின் சுந்தரி ! 

நடிகை ஷோபனா சென்னையில் வசிப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் சென்னையிலேயே மேற்கொள்ள கேரளாவை சேர்ந்த படக்குழு முடிவு செய்துள்ளனராம்.
 | 

14 வருடங்கள் கழித்து மீண்டும் சுரேஷ்கோபியுடன் ஜோடி சேர்ந்துள்ள தளபதியின் சுந்தரி ! 

ரஜினியின் தளபதி படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஷோபனா.  இந்த படத்தில் ஷோபனா நடித்திருந்த சுந்தரி பாடல் இன்றளவும் பிரபலமான படலாகவே உள்ளது.  தமிழ், மலையாளம்  உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த ஷோபனா . நடன கலையிலும் வல்லவராக திகழ்கிறார். அதோடு  இவர் சென்னையில் நடனப்பள்ளி  ஒன்றையும் நடத்தி வருகிறார்.

 இந்நிலையில் திரை உலகை விட்டு விலகி இருந்த ஷோபனா. பிரபல நடிகர் சுரேஷ் கோபியுக்கு ஜோடியாக  14 வருடங்கள் பிறகு  நடித்துவருகிறார். இந்த படத்தை துல்கர் சல்மான் தயாரித்து, நாயகனாக  நடித்து  வருகிறார். இதனை பிரபல இயக்குனர் சத்தியன் அந்திக்காடுவின் மகன் அனுப் சத்தியன் என்பவர் இயக்கி வருகிறார். இதற்கிடையே நடிகை ஷோபனா சென்னையில் வசிப்பதால்  இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் சென்னையிலேயே மேற்கொள்ள  கேரளாவை சேர்ந்த படக்குழு முடிவு செய்துள்ளனராம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP