விஜயின் பிகில் கதை தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!
பிகில் படம் அட்லீ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இதற்கிடையே சமீபத்தில் செல்வா என்பவர் ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் நிறுவனம் தயாரிக்கும் பிகில் திரைப்படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்றும், பிகில் படப்பிடிப்பிற்கு தடை உத்தரவு வழங்க கோரியும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் பிகில் படப்பிடிப்பிற்கு தடை விதிக்க முடியாது என கூறி இந்த வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Big Win for #Bigil! Chennai civil court has dismissed plagiarism case filed by KP Selvah violated copyright of his story and wanted to stop shoot of @Atlee_dir movie. #BigWinForBigil #ThalapathyVijay @Ags_production @archanakalpathi pic.twitter.com/NWTtEN73Yd
— Sreedhar Pillai (@sri50) August 25, 2019
newstm.in
newstm.in