Logo

 ‘ஒத்த செருப்பை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்’

‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்க வேண்டும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
 | 

 ‘ஒத்த செருப்பை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்’

‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்க வேண்டும் இயக்குநர்  ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ‘பார்த்திபனின்  ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  ‘கல்லி பாய்’ திரைப்படம் வெளிநாட்டு படத்தில் இருந்து உருவானது. அந்த படத்தை வெளிநாட்டு விருதுக்கு அனுப்பி வைப்பது இந்தியாவிற்கே அவமானம். மக்கள் பார்க்க வரும்போது சிறிய பட்ஜெட் படங்களை திரையில் இருந்து எடுப்பது கண்டிக்கத்தக்கது. திரையரங்கில் இருந்து ஒத்த செருப்பு திரைப்படத்தை எடுப்பது கொலைக்கு சமமானது. பெரிய படம், சிறிய படம் வெளியாவதில் வரையறைகள் உருவாக்கப்பட வேண்டும்’ என்றார்.

 ‘ஒத்த செருப்பை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்’

மேலும், மணிரத்னம் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ததற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும், தனிமனிதர் தொடர்ந்த வழக்குதான்; மணிரத்னத்திற்கு எங்கள் ஆதரவு உண்டு என்றும் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP