வாய்ப்பு தருவதாக என்னை சீரழித்தனர் - அஜித் படத்தில் அறிமுகமான நடிகை பேட்டி.!
பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகை சோனா. பின்னர் ஷாஜகான், சிவப்பதிகாரம், குரு என் ஆளு, குசேலன், ரௌத்ரம், கோ ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த சோனாவுக்கு சமீபகாலமாகப் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து, நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான கனிமொழி படத்தை தயாரித்த அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
தற்போது அவர், திரிஷா நடித்துள்ள பரமபத விளையாட்டு, வரலட்சுமியின் சேசிங் படத்திலும் நடித்துள்ளார். புதுமுக நடிகைகளின் வரவு, குடிப்பழக்கம் போன்ற காரணங்களால் சினிமா வாய்ப்பை இழந்து தவித்த சோனா, ஒரு பேட்டியில் நான் படவாய்ப்பு கேட்டு போனால் உடலுறவுக்குத்தான் அழைக்கிறார்களே தவிர படவாய்ப்பு தருவதில்லை என கூறி வேதனைப்பட்டார்.
ஏற்கனவே தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி உள்ளிட்டோர் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி வரும் நிலையில் நடிகை சோனைவில் குற்றச்சாட்டும் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in