கமல் சம்மதம் தெரிவித்தால் ‘தேவர் மகன்-2’ எடுப்பேன்: இயக்குநர் சேரன்
நடிகர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்தால் ‘தேவர் மகன்-2’ திரைப்படத்தை எடுப்பேன் என்றும், பிக்பாஸில் கலந்து கொண்டதை அவமானமாக கருதவில்லை என்றும் இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்துகொண்டு 91 நாட்களில் வெளியேறிய திரைப்பட இயக்குநர் சேரனுக்கு சென்னையில் ‘வெல்கம் டூ சேரன்’ என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேரன், ‘நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல நடிகர் விஜய்சேதுபதியே காரணம் ஆவார். பிக்பாஸில் கலந்து கொண்டதை அவமானமாக கருதவில்லை. இந்த நிகழ்ச்சியில் துளியும் கூட ஸ்கிரிப்ட் இல்லை. விரைவில் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளேன். நடிகர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்தால் ‘தேவர் மகன்-2’ திரைப்படத்தை எடுப்பேன்’ என்றார்.
newstm.in
newstm.in