காதலரை கரம்பிடித்தார் பிரியங்கா சோப்ரா: ஜோத்பூரில் களைக்கட்டிய வாணவேடிக்கை
ஜோத்பூரில் கிருஸ்துவ முறைப்படி தனது காதலர் நிக் ஜோன்சை திருமணம் செய்துக் கொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா-நிக் ஜோன்ஸ் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி கோலாகலமாக நடந்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் வாணவேடிக்கை நடத்தப்பட்டது நாளை இந்து மத முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.
முன்னதாக இவர்களின் திருமண ஏற்பாடுகள் கடந்த நவம்பர் 29ம் தேதி மெகந்தி விழாவுடன் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக இருவரும் ஜோத்பூர் சென்றடைந்தனர்.
திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் பிரபலங்கள் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் குடியேறுகிறார்கள். இதற்காக அங்கு ஆடம்பரமான வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர். பிரியாங்காவை விட நிக் ஜோன்ஸ் 11 வயது இளையவர் ஆவார்.
newstm.in
newstm.in