இறக்கத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், சில நாட்களுக்கு பிறகு இன்று வர்த்தகம் இறக்கத்துடன் தொடங்கியது.
கடந்த சில நாள்களாக பங்குச் சந்தை நிலவரம் தொடர்ந்து ஏற்றத்துடனே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 219 புள்ளிகள் இறக்கத்துடன் 36, 035 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 17 புள்ளிகள் குறைந்து 10,839 புள்ளிகளுடன் வர்த்தம் நடைபெற்று வருகிறது.
மகேந்திரா அண்ட் மகேந்திரா, இந்தியாபுல்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை வீழ்ச்சியை சந்தித்தன.
newstm.in