இன்றும் ஏமாற்றாத பங்கு சந்தை
இன்றைய வர்ததக நேர முடிவில், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண், 14 புள்ளிகள் உயர்ந்து, 10,905 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
அதே சமயம், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண், 52 புள்ளிகள் உயர்ந்து, 36,374 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து சில நாட்களாக ஏறுமுகமாகவே காணப்படும் பங்கு சந்தையில், இன்று சரிவு ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டது.
எனினும், முக்கிய நிறுவனங்களின் செயல்பாட்டால், அவற்றின் விலையில் சரிவு ஏற்படவில்லை. இதனால், முதலீட்டாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தாமல், சந்தை வர்த்தகம் பச்சை நிறத்தில் முடிந்தது.
newstm.in
newstm.in